திருக்கார்த்திகையை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோயிலில் தீப காட்சி
சுவாமிமலை 


திருக்கார்த்திகையை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோயிலில் தீப காட்சி நேற்று இரவு நடைபெற்றது.


கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் புகழ்பெற்றது. பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை விழா தொடங்கியது. பின்னர் சுப்பிரமணியசுவாமி பரிவாரங்களுடன் மலைக்கோயிலிலிருந்து உற்சவ மண்டபம் எழுந்தருளினார்,.
இவ்விழாவின் தொடர்ச்சியாக நேற்று மாலை (11-ம் தேதி) வரை சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதிவுலா நடைபெற்றது. விழாவின் முக்கியநாளான நேற்று  (திருக்கார்த்திகை தினத்தன்று) காலை திருவள்ளுவர் பாவம்டா தேர் வடம் பிடிக்கப்பட்டது. நான்கு ராஜ வீதிகளிலும் தேர் வலம் வந்தது. தொடர்ந்து நாள்முழுவதும் விரைவு தரிசனம் நடைபெற்றது. பின்னர் இரவு 9 மணியளவில் தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், இரவு 11 மணிக்கு திருக்கார்த்திகை தீபக்காட்சியும் நடைபெற்றது.
இன்று (டிச. 11 -ம்தேதி) காலை படிச்சட்டத்தில் வீதியுலா நடைபெற்று காவிரியில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. தொடர்ந்து இரவு 8 மணியளவில்  கொடியிறக்கம் நடைபெறுகிறது.